திருக்குறள்

1142.

மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர்.

திருக்குறள் 1142

மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர்.

பொருள்:

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

மு.வரததாசனார் உரை:

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

சாலமன் பாப்பையா உரை:

மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.